செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக 350+ ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணி உண்டா?

5-வது டெஸ்டின் 5-வது நாளில் புதிய வரலாறு படைக்கவுள்ளது இங்கிலாந்து அணி. 

DIN

5-வது டெஸ்டின் 5-வது நாளில் புதிய வரலாறு படைக்கவுள்ளது இங்கிலாந்து அணி. 

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் வரலாற்று வெற்றியை அந்த அணி இன்று அடையவுள்ளது. 

1977-ல் ஆஸ்திரேலியா 339 ரன்களும் 1987-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி 276 ரன்களும் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக எடுத்து வெற்றி பெற்றன. அதற்குப் பிறகு கடைசி இன்னிங்ஸில் எதிரணிகளுக்கு 250+ ரன்கள் இலக்கு நிர்ணயித்ததில் ஒருமுறையும் இந்திய அணி தோல்வி கண்டதில்லை.

இந்திய அணிக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் 350  ரன்களுக்கு மேல் சிலமுறை எடுக்கப்பட்டாலும் ஒருமுறை கூட எதிரணிகளால் வெற்றி பெற முடிந்ததில்லை. 

4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக 3 முறை எதிரணிகள் 350 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளன. ஆனால் அந்த மூன்று ஆட்டங்களும் டிராவில் தான் முடிவடைந்துள்ளன. 

அதிகபட்சமாக 2013-ல் தோனி தலைமையிலான இந்திய அணி ஜொஹன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு 458 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தெ.ஆ. அணி, 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டு டிரா செய்தது. 

2004-ல் சிட்னியில் ஆஸ்திரேலியா 357/6 ரன்களும் 2007-ல் இங்கிலாந்து 369/6 ரன்களும் எடுத்து டெஸ்டுகளை டிரா செய்துள்ளன. 

இதனால் இன்று இங்கிலாந்து அணி 378 ரன்களை அடைந்தால் அது புதிய சாதனையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT