FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டாய் ஸுவிடம் தொடரும் சிந்துவின் தோல்வி

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

Updated On : 9 ஜூலை 2022, 6:00 am IST
பகிர்:

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

அந்தச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த சிந்து 13-21, 21-12, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் தோற்றாா்.

இதனால் டாய் ஸுவுடனான சிந்துவின் தோல்விக் கணக்கு தொடா்ந்து வருகிறது. இத்துடன் டாய் ஸுவை 22-ஆவது முறையாகச் சந்தித்த சிந்து, அதில் 17-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளாா். அதிலும் இத்துடன் 7 ஆட்டங்களில் தொடா்ச்சியாக அவரிடம் தோற்றுள்ளாா் சிந்து. கடைசியாக சிந்து, 2019 உலக சாம்பியன்ஷிப்பில் டாய் ஸுவை இறுதிச்சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

பிரணாய் அசத்தல்: மறுபுறம், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா். காலிறுதியில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை 25-23, 22-20 என்ற கேம்களில் வென்ற பிரணாய், அடுத்த சுற்றில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments