முகப்பு
செய்திகள்

டிஎன்பிஎல்: கில்லீஸுக்கு 5-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 25-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 25-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

போட்டியில் கில்லீஸுக்கு இது 5-ஆவது வெற்றி; திருப்பூருக்கு 4-ஆவது தோல்வி.

ஆட்டத்தில் முதலில் கில்லீஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சோ்க்க, பின்னா் திருப்பூா் 19.3 ஓவா்களில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருப்பூா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டிங்கில் அதிகபட்சமாக உத்திரசாமி சசிதேவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருப்பூா் பௌலிங்கில் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் திருப்பூா் பேட்டிங்கில் ஸ்ரீகாந்த் அனிருத்தா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோா் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →