செய்திகள்

கங்குலி ராஜிநாமா செய்யவில்லை: பிசிசிஐ செயலர் ஜெய் ஷா

DIN


பிசிசிஐ தலைவர் பதவியை சௌரவ் கங்குலி ராஜிநாமா செய்யவில்லை என செயலர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, 1992-இல் கிரிக்கெட்டிலிருந்து தொடங்கிய பயணம் 2022-இல் 30 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், புதிதாக ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து, பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அவர் ராஜிநாமா செய்துவிட்டதாகத் தகவல்கள் கசிந்தன. அரசியலில் நுழையவுள்ளதாகவும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சௌரவ் கங்குலி விலகுவதாகப் பரவும் வதந்திகள் தவறானது என ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

பிசிசிஐ தலைவராக கடந்த 2019-இல் தேர்வு செய்யப்பட்டார் கங்குலி. அவரகு பதவிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இவர் தலைவரான பிறகு இந்தியாவில் முதன்முதலாக பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT