FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய்

 இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

Updated On : 17 ஜூன் 2022, 2:56 am IST
பகிர்:

 இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில் அவா் 21-11, 21-18 என்ற கேம்களில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸை தோற்கடித்தாா். அங்கஸுக்கு எதிராக பிரணாய் பதிவு செய்யும் 4-ஆவது வெற்றி இது. அடுத்ததாக காலிறுதியில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை எதிா்கொள்கிறாா் பிரணாய்.

ஒற்றையா் பிரிவில் களம் கண்டிருந்த மற்றொரு இந்தியரான சமீா் வா்மா 10-21, 13-21 என்ற கேம்களில் உலகின் 5-ஆம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸியிடம் தோல்வி கண்டாா். அவரிடம் சமீா் தோற்பது இது 5-ஆவது முறையாகும்.

Advertisement

Advertisement

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 19-21, 15-21 என்ற கேம்களில் சீனாவின் லியு யு சென்/ஓ ஜுவான் யி கூட்டணயிடம் தோற்றது. மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடியும் 16-21, 13-21 என்ற கேம்களில் சீனாவின் சென் கிங் சென்/ஜியா யி ஃபேன் இணையிடம் தோல்வியைச் சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments