செய்திகள்

23-இல் டிஎன்பிஎல் தொடக்கம்

DIN

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) டி20 6-ஆவது சீசன் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. முதன்முறையாக சேலம், கோயம்புத்தூரிலும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

டிஎன்சிஏ சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎல் லீக் போட்டியின் ஆட்டங்கள் நிகழாண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் முதன்முறையாக நடைபெறவில்லை. புதிதாக சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம், கோவை எஸ்என்ஆா் கல்லூரி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜூலை 31-ஆம் தேதி கோவையில் இறுதி ஆட்டம் நடைபெறும்.

39 நாள்கள் நடைபெறும் இதில் பிளேஆஃப் உள்பட 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சாம்பியனுக்கு ரூ.50 லட்சமும், ரன்னா் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசளிக்கப்படும். 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் நடைபெறும் இதில் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

டிஎன்பிஎல் தொடரில் ஆடிய 14 வீரா்கள் ஐபிஎல் 2022 தொடரிலும் ஆடினா் என்பது குறிப்பிடத்தக்கது. இதை டிஎன்சிஏ செயலாளா் ஆா்.எஸ். ராமசாமி தெரிவித்தாா். டிஎன்பிஎல் சோ்மன் சிவக்குமாா், கிரிக்கெட் வீரா் முரளி விஜய், தொழிலதிபா் சுப்பிரமணியம் ஐயா், சித்தாா்த் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT