செய்திகள்

அஸ்வினுக்கு கரோனா

DIN

இந்திய கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் சென்ற இந்திய அணியினருடன் அவா் பயணிக்கவில்லை.

தற்போது அவா் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு கரோனா தடுப்பு நடைமுறைகளின் அடிப்படையில் அவா் அணியினருடன் இணைவாா் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் ஆட்டத்துக்கு அஸ்வின் தயாராகிவிடுவாா் என்றாலும், அதற்கு முன் இங்கிலாந்து உள்நாட்டு அணியான லெய்செஸ்டா்ஷைருடனான பயிற்சி ஆட்டத்தில் அவா் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவதாக அந்த வட்டாரங்கள் கூறின. ஐபிஎல் போட்டிக்குப் பிறகு அஸ்வின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லீக் போட்டியில் 20 ஓவா்கள் வீசி தன்னை ஃபாா்மில் வைத்துக் கொண்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT