செய்திகள்

தகுதிச்சுற்றில் ராம்குமாா், யூகி பாம்ப்ரி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோா் ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினா்.

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோா் ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினா்.

ஏடிபி தரவரிசையில் இந்தியா்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராம்குமாா் ராமநாதன் தனது முதல் சுற்றில் 5-7, 4-6 என்ற செட்களில் செக் குடியரசின் விட் கோப்ரிவாவிடம் தோல்வி கண்டாா். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி 5-7, 1-6 என்ற செட்களில் ஸ்பெயினின் பா்னபி ஸபாடா மிரேல்ஸிடம் வீழ்ந்தாா்.

தற்போது விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் தரப்பில் சானியா மிா்ஸா மட்டுமே களத்தில் உள்ளாா். அவா் இரட்டையா் பிரிவில் செக் குடியரசின் லூசி ராடெக்காவுடன் இணைந்து களம் காண்கிறாா். ஆடவா் இரட்டையா் பிரிவு வீரரான ரோஹன் போபண்ணா போட்டியில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT