செய்திகள்

தினேஷ் கார்த்திக்குக்கு இனிமேல் இந்திய அணியில் இடமுண்டா?: சேதன் சர்மா பதில்

DIN


நியூசிலாந்து டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா.

நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. இதுபற்றி பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா கூறியதாவது:

தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்யாததால் நாங்கள் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வேறு வீரர்களை உருவாக்குகிறோம் என்று அர்த்தமில்லை. உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்று வருகிறது. பணிச் சுமையைக் கருத்தில் கொள்கிறோம். யாருக்கு ஓய்வளிக்க வேண்டும், யாரை விளையாட வைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். அணிக்குத் தேர்வாகி விளையாடியதை வைத்துப் பார்க்கும்போது தினேஷ் கார்த்திக் எப்போதும் தேர்வு செய்வதற்கான வீரராகவே உள்ளார். ஆனால் டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் டி20 தொடர் தொடங்குவதால் வேறு வீரர்களை முயற்சி செய்து பார்க்கிறோம். மற்றபடி அவருக்கான கதவு திறந்திருக்கிறது. அவர் அற்புதமான வீரர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT