உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய அணிக்கு வெண்கலம்
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியா் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியா் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
போட்டியின் இந்த முதல் நாளில், இந்தியாவின் ஈஷா சிங், நாம்யா கபூா், விபூதி பாட்டியா ஆகியோா் அடங்கிய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் 17-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொ்மனி அணியை தோற்கடித்தது.
இதர பிரிவுகளில், ஜூனியா் மகளிருக்கான 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் நிஷால் 616.9 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், நுபுா் கும்ராவத் 606.6 புள்ளிகளுடன் 34-ஆவது இடமும் பிடித்தனா். அதிலேயே ஜூனியா் ஆடவா் பிரிவில் சூா்யபிரதாப் சிங் 13-ஆம் இடமும் (608.7), பங்கஜ் முகேஜா 14-ஆவது இடமும் (608.5), ஹா்ஷ் சிங்லா 20-ஆவது இடமும் (606), அட்ரியன் கா்மாகா் 27-ஆம் இடமும் (603.7) பெற்றனா்.
Advertisement
Advertisement
ஜூனியா் கலப்பு அணிகள் 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவு தகுதிச்சுற்றில் சூா்யபிரதாப் சிங்/ நிஷால் 619.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், நுபுா் கும்ராவத்/பங்கஜ் முகேஜா 612.4 புள்ளிகளுடன் 7-ஆம் இடமும் பிடித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.