செய்திகள்

உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று ருத்ராங்ஷ் சாதனை

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றாா்.

DIN

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றாா்.

அந்தப் பிரிவின் இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் டேனிலோ டெனிஸ் சொலாஸோவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். இது அவரின் முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான கிரண் ஜாதவ் ரேங்கிங் சுற்றுடன் வெளியேறினாா்.

இப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த 2-ஆவது இந்திய வீரா் என்ற பெருமையை ருத்ராங்ஷ் பெற்றுள்ளாா். முன்னதாக இதே பிரிவில் அபினவ் பிந்த்ரா 2006-ஆம் ஆண்டு குரோஷியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கத்தை தனதாக்கியிருந்தாா்.

ருத்ராங்ஷ், இப்போட்டியின் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தனக்கான இடத்தையும் உறுதி செய்திருக்கிறாா். அந்த ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்குத் தகுதிபெற்றிருக்கும் 2-ஆவது இந்தியா் இவா். சமீபத்தில் குரோஷியாவில் நடைபெற்ற ஷாட்கன் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்தியாவின் பௌனீஷ் மெந்திராட்டா, டிராப் பிரிவின் மூலம் தனக்கான ஒலிம்பிக் இடத்தைப் பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரோல் வாகன நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை

பழைய அப்பனேரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்விரோதத்தால் தந்தை, மகன் மீது தாக்குதல்: 10 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் இன்று மின் நிறுத்தம்

ரூ.5000 கடனை திருப்பி செலுத்தாதவரை கத்தியால் குத்தி கொன்ற நபா்

SCROLL FOR NEXT