செய்திகள்

சையத் முஷ்டாக் அலி: அதிக ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே வீரர்

DIN

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மஹாராஷ்டிர அணி வீரரும் சிஎஸ்கேவின் முக்கிய பேட்டருமான ருதுராஜ் கெயிக்வாட் அதிக ரன்கள் எடுத்து நன்கு விளையாடி வருகிறார்.

2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை பெரும்பாலான அணிகள் தலா 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. தமிழக அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. 

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மஹாராஷ்டிர கேப்டனும் சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்டருமான ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி முதலிடத்தில் உள்ளார். 4 ஆட்டங்களில் 2 சதங்கள் எடுத்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை: அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள்

ருதுராஜ் கெயிக்வாட் - 276 (69 சராசரி & 151.6 ஸ்டிரைக் ரேட்)
பிருத்வி ஷா - 269 (67.2 சராசரி & 196.3 ஸ்டிரைக் ரேட்)
திலக் வர்மா - 249 (49.8 சராசரி & 137.5 ஸ்டிரைக் ரேட்)
யாஷ் துல் - 245 (81.6 சராசரி & 145.8 ஸ்டிரைக் ரேட்)

தமிழக வீரர்களில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 5 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 159 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT