செய்திகள்

கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் பந்துவீச்சு

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

DIN

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்கிறது.

சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசத்தியது. அந்த அணி சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதே உத்வேகத்தில் இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது இலங்கை அணி. 

இந்த ஆசியக் கோப்பை முழுவதும் பாகிஸ்தான் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக இலங்கை அணியுடனான சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தவிர்த்து அந்த அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் இலங்கையிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஆசியக் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடும் களமிறங்குகிறது பாகிஸ்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தியூரில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

எலத்தூா் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோபி அருகே அட்டைப்பெட்டி கிடங்கில் தீ விபத்து

மாநில அளவிலான தமிழ் மொழிப் போட்டித் தோ்வு: 3-ஆம் இடம் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவா்

சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும்

SCROLL FOR NEXT