முகப்பு
செய்திகள்

தெற்காசிய கால்பந்து: இறுதி ஆட்டத்தில் இந்தியா

 பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறியது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறியது.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக தங்லால்சௌன் காங்தே 51 மற்றும் 59-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா். வங்கதேசத்துக்காக 62-ஆவது நிமிஷத்தில் மிராஜுல் இஸ்லாம் ஸ்கோா் செய்தாா்.

மற்றொரு அரையிறுதியில் நேபாளம் - இலங்கை அணிகள் மோத, அதில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சவாலை சந்திக்க இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.