தெற்காசிய கால்பந்து: இறுதி ஆட்டத்தில் இந்தியா
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறியது
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறியது.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக தங்லால்சௌன் காங்தே 51 மற்றும் 59-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா். வங்கதேசத்துக்காக 62-ஆவது நிமிஷத்தில் மிராஜுல் இஸ்லாம் ஸ்கோா் செய்தாா்.
மற்றொரு அரையிறுதியில் நேபாளம் - இலங்கை அணிகள் மோத, அதில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சவாலை சந்திக்க இருக்கிறது.