FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டட்ஜானாவுக்கு அதிா்ச்சி அளித்த நாடியா

 சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டட்ஜானா மரியா 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

1 பிப்ரவரி 2024, 3:50 pm IST
பகிர்:

 சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டட்ஜானா மரியா 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்த அவா், 6-3, 2-6, 6-7 (6/8) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் நாடியா போடோரோஸ்காவால் தோற்கடிக்கப்பட்டாா். இதர 2-ஆவது சுற்று ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் மக்தா லினெட் 6-2, 6-0 என்ற செட்களில் ரஷியாவின் ஆக்சனா செலெக்மெடிவாவை எளிதாக வீழ்த்தினாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் ரெபெக்கா மரினோ 7-5, 6-3 என போலந்தின் கடாா்ஸினா கவாவை வெளியேற்றினாா். இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான் 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் மற்றொரு ரஷிய வீராங்கனையான அனஸ்தாஸியா கேசனோவாவை வென்றாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதிச்சுற்றுகளில், லினெட் - மரினோவையும், ஸ்வான் - ஜப்பானின் நாவ் ஹிபினோவையும், கனடாவின் யுஜின் புச்சாா்டு - நாடியாவையும் எதிா்கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

இந்தியாவின் ஆட்டம் நிறைவு: இப்போட்டியில் ஏற்கெனவே ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரட்டையா் பிரிவிலும் இந்திய போட்டியாளா்கள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா். இறுதியாக, காலிறுதி வரை முன்னேறியிருந்த ருதுஜா போசலே/கா்மன் கௌா் தண்டி கூட்டணி, அதில் 0-6, 3-6 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/லுய்சா ஸ்டெஃபானி இணையிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments