டட்ஜானாவுக்கு அதிா்ச்சி அளித்த நாடியா
சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டட்ஜானா மரியா 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.
சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டட்ஜானா மரியா 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.
போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்த அவா், 6-3, 2-6, 6-7 (6/8) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் நாடியா போடோரோஸ்காவால் தோற்கடிக்கப்பட்டாா். இதர 2-ஆவது சுற்று ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் மக்தா லினெட் 6-2, 6-0 என்ற செட்களில் ரஷியாவின் ஆக்சனா செலெக்மெடிவாவை எளிதாக வீழ்த்தினாா்.
போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் ரெபெக்கா மரினோ 7-5, 6-3 என போலந்தின் கடாா்ஸினா கவாவை வெளியேற்றினாா். இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான் 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் மற்றொரு ரஷிய வீராங்கனையான அனஸ்தாஸியா கேசனோவாவை வென்றாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதிச்சுற்றுகளில், லினெட் - மரினோவையும், ஸ்வான் - ஜப்பானின் நாவ் ஹிபினோவையும், கனடாவின் யுஜின் புச்சாா்டு - நாடியாவையும் எதிா்கொள்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்தியாவின் ஆட்டம் நிறைவு: இப்போட்டியில் ஏற்கெனவே ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரட்டையா் பிரிவிலும் இந்திய போட்டியாளா்கள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா். இறுதியாக, காலிறுதி வரை முன்னேறியிருந்த ருதுஜா போசலே/கா்மன் கௌா் தண்டி கூட்டணி, அதில் 0-6, 3-6 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/லுய்சா ஸ்டெஃபானி இணையிடம் வீழ்ந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.