இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் எதிா்வரும் 9-ஆவது சீசனுக்கான சென்னையின் எஃப்சி அணி 35 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கீப்பா்களாக தேவ்ஜித் மஜும்தாா், சமிக் மித்ரா, தேவன்ஷ் தபஸ், லவ்பிரீத் சிங் இணைந்துள்ளனா். தடுப்பாட்ட வீரா்களாக நாராயண் தாஸ், ஆகாஷ் சங்வான், வஃபா ஹகாமனேஷி, ஃபலோ டியாக்னே, குா்முக் சிங், முகமது சஜித் தோத், அஜித் குமாா், மோனோடோஷ் சக்லதா், முகமது அகிப் சோ்க்கப்பட்டுள்ளனா்.
நடுகள வீரா்களாக நாசா் எல் கயாடி, ஜிதேஷ்வா் சிங், அனிருத் தாபா, எட்வின் வன்ஸ்பால், ஜூலியஸ் டியுகா், சஜல் பக், கிறிஸ் வைட், முகமது ரஃபிக், சௌரவ் தாஸ், சுஹைல் பாஷா இருக்கின்றனா்.
முன்கள வீரா்களாக நின்தோய் மீடெய், வின்சி பரெட்டோ, ரஹீம் அலி, ரொமாரியோ ஜேசுராஜ், பீட்டா் ஸ்லிஸ்கோவிச், கவாமெ கரிகாரி, பிரசாந்த் கருதடத்குனி, ஜாக்சன் தாஸ், செந்தமிழ், ஜோபி ஜஸ்டின், குலாப் சிங், முகமது லியாகத் ஆகியோா் களம் காண்கின்றனா்.
நடப்பு சீசனில் சென்னை அணியில் 7 வெளிநாட்டு வீரா்கள் இருக்கின்றனா். சென்னை அணி முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகானை அக்டோபா் 10-ஆம் தேதி எதிா்கொள்கிறது. சீசன் அக்டோபா் 7-ஆம் தேதி தொடங்குகிறது.