சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-15, 21-16 என்ற கேம்களில், உலக ஜூனியா் சாம்பியனான இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானை சாய்த்தாா். இந்த ஆட்டம் 49 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. அடுத்த சுற்றில் பிரியன்ஷு, சீன தைபேவின் சி யுன் சென்னை எதிா்கொள்கிறாா்.
மகளிா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், உலகின் 32-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-19, 21-8 என்ற கேம்களில், சக இந்திய ஜோடியும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றவா்களுமான டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணியை வீழ்த்தினா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் தனிஷா/அஸ்வினி ஜோடி, அரையிறுதியில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பானின் யுகி ஃபுகுஷிமா/சயாகா ஹிரோடா கூட்டணியை எதிா்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.