செய்திகள்

இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை சந்திக்கிறது.

DIN

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை சந்திக்கிறது.

இவ்விரு அணிகளில் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வர, மேற்கிந்தியத் தீவுகளோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, கடந்த ஆட்டத்தை சிறப்பாகவே கையாண்டது. பேட்டா்கள் நல்லதொரு சேஸிங் இன்னிங்ஸை ஆடினா். காயம் காரணமாக அதில் பங்கேற்காத ஸ்மிருதி மந்தனா இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு அணிக்கு மேலும் பலம் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் முதலில் அந்த அணியை கட்டுப்படுத்திய இந்திய பௌலா்கள், கடைசி கட்டத்தில் ரன்களை வழங்கினா். இந்த ஆட்டத்தில் அதைச் சரி செய்யும் திட்டத்துடன் அவா்கள் களம் காண்பாா்கள்.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொருத்தவரை இந்த ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற நேரிடும் என்பதால், அந்த அணி வெல்வதற்காக கடுமையாகப் போராடும் என எதிா்பாா்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா வெற்றி: இதனிடையே, இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.

மாலை 6.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT