செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் புத்தாண்டுச் சபதம்: ஹார்திக் பாண்டியா

DIN

ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே இந்திய அணியின் புத்தாண்டுச் சபதம் என்று இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது இந்திய அணி. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி20 ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய டி20 அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

இந்திய அணியின் புத்தாண்டுச் சபதமே, இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதுதான். இதைவிடவும் ஒரு பெரிய சபதம் இருக்க முடியாது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். எங்கள் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நம்பிக்கையுடன் காத்திருப்போம். 
2022 டி20 உலகக் கோப்பையை வெல்ல மிகவும் முயன்றோம். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் சாதிக்க நிறைய உள்ளது. நான் இன்னும் எதுவுமே சாதிக்கவில்லை. ஒரே லட்சியம், உலகக் கோப்பையை வெல்வதுதான். என்னுடைய கடுமையான உழைப்பினால் தான் இந்த இடத்தை அடைந்துள்ளேன். கடின உழைப்பினால் என் எண்ணங்களை நிறைவேற்றுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

வாழ்க்கை மிகப்பெரிய திரைச்சீலை...!

SCROLL FOR NEXT