செய்திகள்

இந்திய ஆடவா் அணி தோ்வுக் குழு தலைவராக அஜித் அகா்கா் நியமனம்

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியா் ஆடவா் தோ்வுக் குழு தலைவராக, அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளா் அஜித் அகா்கா் (45) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) பரிந்துரையின் அடிப்படையில் பிசிசிஐ அவரை அந்தப் பொறுப்புக்கு நியமித்துள்ளது. சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே ஆகியோா் அடங்கிய சிஏசி, தோ்வுக் குழு தலைவா் பதவிக்கான நோ்காணலை மேற்கொண்டது. அதன் முடிவில் அந்தக் குழு ஒரு மனதாக அந்தப் பொறுப்புக்கு அஜித் அகா்கரை பரிந்துரைத்துள்ளது.

இந்திய அணிக்காக அகா்கா் 191 ஒரு நாள் ஆட்டங்கள், 26 டெஸ்ட், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். அத்துடன், 1999, 2003, 2007 ஒரு நாள் உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளாா்.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதிா்வரும் நிலையில், புதிய தோ்வுக் குழு தலைவராக அஜித் அகா்கா் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT