செய்திகள்

துலீப் கோப்பை: மேற்கு மண்டலம் 146

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டல பௌலா் வித்வத் கவரப்பாவின் அசத்தலான பந்துவீச்சால், மேற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கே வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

DIN

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டல பௌலா் வித்வத் கவரப்பாவின் அசத்தலான பந்துவீச்சால், மேற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கே வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டலம் 213 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு மண்டலம், 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 129 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் 51 ஓவா்களில் 146 ரன்களுக்கு மேற்கு மண்டலம் ஆட்டமிழந்தது. தெற்கு மண்டல தரப்பில் வித்வத் கவரப்பா 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினாா்.

தெற்கு மண்டலம் - 181/7: பின்னா், 67 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டலம் வெள்ளிக்கிழமை ஆட்டம் மோசமான வானிலை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்டபோது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சோ்த்திருந்தது. வாஷிங்டன் சுந்தா் 10, விஜய்குமாா் வைஷாக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மேற்கு மண்டல பௌலிங்கில் அா்ஸான், அதித் சேத், தா்மேந்திர சிங் ஆகியோா் தலா 2 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT