செய்திகள்

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 114 ரன்களுக்கு சுருண்டது மே.இ.தீவுகள்!

இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 114 ரன்களுக்கு சுருண்டது.

DIN

இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 114 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  114 ரன்களுக்கே சுருண்டது. அந்த அணியில் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT