செய்திகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி எனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியது: ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது: நான் இந்திய அணியில் அறிமுகமானபோது 7-வது வீரராக களமிறங்கினேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மீண்டும் அதே இடத்தில் களமிறங்கியது எனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியது. இந்திய அணியில் புதிதாக விளையாடுபவர்களுக்கு அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் கொடுக்க நாங்கள் விரும்பினோம் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனவெறிக்கு உள்ளானதாக வினிசியஸ் புகார்..! ரியல் மாட்ரிட் வெற்றியும் சர்ச்சையும்!

மார்ச் 11ல் திருச்சி வருகிறார் பிரதமர் மோடி! ஒரே மாதத்தில் 3 முறை பயணம்!

கூகுள் பிக்சல் 10எ அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

அம்மா வேண்டாம், அக்கா என்றால் போதும்: தமிழிசை கலகலப்பு!

வங்கி, உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு: பங்குச் சந்தை 3வது நாளாக உயர்வு!

SCROLL FOR NEXT