ஒருநாள்: இந்தியா முதலில் பந்துவீச்சு, வார்னர், கேரி இல்லாமல் களமிறங்கும் ஆஸி. அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. மும்பையில் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஜடேஜா, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், பாண்டியா ஆகிய பந்துவீச்சாளர்களும் இஷான் கிஷன், ஷுப்மன் கில், கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் ஆகிய பேட்டர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
Advertisement
ஆஸி. அணியில் அலெக்ஸ் கேரிக்குப் பதிலாக ஜோஷ் இங்க்லிஷ் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து குணமாகாத டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.