மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். இன்று நடைபெறும் போட்டி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளில் சிஎஸ்கேவும், ஒரு போட்டியில் மும்பையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.