செய்திகள்

கேகேஆர் அணிக்கு அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் யார் தெரியுமா? 

DIN

ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை திங்கள்கிழமை தோற்கடித்தது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது. 

ஆண்ட்ரே ரஸ்ஸெலும் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 42 ரன்கள் விளாசி அதிரடி காட்டினாா். முடிவில் ரிங்கு சிங் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 

ஆட்ட நாயகன் விருது ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு கிடைத்தது. இவர்தான் கொல்கத்தா அணிக்கு அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

கேகேஆர் அணிக்கு அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்: 

ஆண்ட்ரே ரஸ்ஸல்- 13 
சுனில் நரைன் - 12 
கௌதம் கம்பீர் - 10 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னறிவிப்பின்றி புதூா் தபால்நிலையம் மூடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் தா்னா

நாய் கடித்து 101 வயது மூதாட்டி காயம்

சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT