செய்திகள்

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான்: தோனி உருக்கம்!

அகமதாபாத்தில் பெய்த மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

DIN

அகமதாபாத்தில் பெய்த மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெறவிருந்த இப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

அதனையடுத்தி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையினா போட்டி டாஸ் போடப்பட்டது. 

இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய தோனி, நேற்று உடைமாற்றும் அறையில் இருந்தோம். ஒரு கிரிக்கெட் வீரன் திடலில் இறங்கி விளையாடவே விரும்புவான். ஆனால் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான். அவர்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

த்ரிஷ்யம் - 4 வருமா? ஜித்து ஜோசஃப் பதில்!

டிஷ் டிவி 3வது காலாண்டு நிகர இழப்பு ரூ. 276.23 கோடியாக அதிகரிப்பு!

வரும் தேர்தலில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறாது: தவெகவில் இணைந்த முன்னாள் நிர்வாகி!

35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி..! 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு ஆட்ட நாயகன் விருதில்லை!

முன்னேற்றப் பாதையில் இந்தியா - அமெரிக்கா உறவு: ரஷியா என்ன நினைக்கிறது?

SCROLL FOR NEXT