செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள்!

DIN

ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி சமன் செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி இந்த சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிறந்த நாளில் விளாசியுள்ள இந்த சதம் அவருக்கு மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. 

இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை  விராட் கோலி சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்

விராட் கோலி - 49 சதங்கள் (277 போட்டிகளில்)
சச்சின் டெண்டுல்கர் - 49 சதங்கள் (452 போட்டிகளில்)
ரோஹித் சர்மா - 31 சதங்கள் (251 போட்டிகளில்)
ரிக்கி பாண்டிங் - 30 சதங்கள் (365 போட்டிகளில்)
சனத் ஜெயசூர்யா - 28  சதங்கள் (433 போட்டிகளில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் விரிவுபடுத்தப்பட்ட ஆா்.டி. விவாஹா ஜுவல்லா்ஸ் தொடக்கம்

பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீா் திறப்பு

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT