முகப்பு
செய்திகள்

கடைசி லீக் போட்டி: இந்தியா பேட்டிங்! 

உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்துள்ள்ளது. 

Updated On : 12 நவம்பர் 2023, 1:56 pm IST
பகிர்:

இந்த உலகக் கோப்பையில் தான் ஏற்கெனவே ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது. அதே வேளை நெதா்லாந்து அணி வெறும் 2 வெற்றிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதுவது உறுதியாகிவிட்டது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சேஸிங் செய்தால் பாகிஸ்தான் 6.4 ஓவா்களில் 338 ரன்களைக் குவித்து வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிட்டும் என்ற கடினமான இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் அதை செய்ய முடியாததால், பாகிஸ்தான் அதிகாரப்பூா்வமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

இந்நிலையில் லீக்கின் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. யாருக்கும் ஓய்வு அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் மாற்றமில்லை. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.