செய்திகள்

முதல் டி20: சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ்; இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த ஓரிரு நாட்களுக்குப் பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில்  இன்று (நவம்பர் 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின், ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோஷ் இங்லிஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. ஜோஷ் இங்லிஷ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவர் இந்திய பந்துவீச்சாளர்களை தனது அபாரமான ஷாட்களால் திணறடித்தார். அவ்வப்போது பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தன. நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் எடுத்தார். அவர் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 50 பந்துகளில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டொய்னிஸ் 7 ரன்களுடனும், டிம் டேவிட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

நிறுத்தம் தேடும் நகரம் !

தொடரும் மரண தண்டனை சர்ச்சை...

SCROLL FOR NEXT