செய்திகள்

ஆசிய விளையாட்டுகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

DIN

ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் ஆடவர் அணி களமிறங்கியுள்ளது.

தகுதி சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய நேபாள அணியுடன், நேரடியாக காலிறுதியில் களமிறங்கும் இந்திய அணி இன்று மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை இந்திய அணி குவித்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 100(49 பந்துகள்), ரிங்கு சிங் 37(15), ஷிவம் துபே 25, ருதுராஜ் 25 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திபேந்திர சிங் 32, சுந்தீப் ஜோரா 29, குஷல் மல்லா 29 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 3, ரவி பிஸ்னோய் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT