செய்திகள்

இன்றும் சதம் விளாசிய டி-காக்: ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது.

DIN

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி-காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். இந்த இணை தென்னாப்பிரிக்காவுக்கு சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வாண்டர் துசென் 26 ரன்களில் ஆட்டமிழக்க மார்கரம் மற்றும் டி-காக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்காவுக்கு ரன்களை சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய டி-காக் சதமடித்து அசத்தினார். அவர் 106 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த போட்டியிலும் டி-காக் சதமடித்திருந்தார். மார்கரம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் க்ளாசன் (29 ரன்கள்), டேவிட் மில்லர் (17 ரன்கள்), மார்கோ ஜேன்சன் (26 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. 

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT