செய்திகள்

123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்!

123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

DIN

123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்சில் வருகிற 2028  ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒலிம்பிக் குழுவிடம் அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்  ஏற்பாட்டாளர்கள்  முன்வைத்தனர். 

இந்த நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கிரிக்கெட்டைத் தவிர்த்து பேஸ்பால் உள்ளிட்ட மேலும் நான்கு புதிய போட்டிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், எத்தனை அணிகள் பங்கேற்கும் மற்றும் பங்கேற்கும்  அணிகளுக்கான தகுதி என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கிரிக்கெட் முதலும், கடைசியுமாக கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில்  இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT