முகப்பு
செய்திகள்

அசத்திய விராட் கோலி: இந்தியா அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

செய்திகள்

அசத்திய விராட் கோலி: இந்தியா அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5  விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தொடர்ந்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் 26 ரன்களை எடுத்து விக்கெட் ஆனார். கேப்டன் ரோகித், அதிரடியாக விளையாடி 46 ரன்களில் அவுட் ஆனார். 

அதன்பின், களமிறங்கிய விராட் கோலி தன் அசத்தலான ஆட்டத்தால் 95 ரன்கள் எடுத்து இறுதியில் சதம் அடிப்பதற்குள் தன் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜடேஜா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இந்த வெற்றி மூலம் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →