ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் அக்ஸர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகிறார். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனாவுக்குப் பதில் துஷான் ஹேமந்தா களமிறங்குகிறார்.
இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.