முகப்பு
செய்திகள்

கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் ஜிம்பாப்வே, அயர்லாந்து!

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று  டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
பகிர்:

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று  டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன.

அயர்லாந்து அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று (டிசம்பர் 10) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேவும், இரண்டாவது போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்றன. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், டி20 தொடரை வெல்லப்போவது யார் எனத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று  நடைபெற்று வருகிறது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments