கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!
கடலூரில் நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்...
கடலூரில் நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் பிரபல நடிகரான விஜய் தலைமையிலான தவெக இடையில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.
தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு பணிகளை பல்வேறு கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 9 அன்று கடலூர் மஞ்சக்குப்பம் திடல் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை (ஏப். 9) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யின் கடலூர் பிரசாரம் வரும் ஏப். 11 அன்று நடைபெறும் எனக் கூறப்படுகிறது.