முகப்பு
செய்திகள்

சென்னைக்கு வந்தார் ஜடேஜா

தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் பிரபல ஆல்ரவுண்டர் ஜடேஜா.

Updated On : 23 ஜனவரி, 2023 at 4:39 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:22 PM

தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் பிரபல ஆல்ரவுண்டர் ஜடேஜா.

காயம் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணி தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடவுள்ள ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஜடேஜா விளையாடவுள்ளார். இந்த ஆட்டம் சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும்  ஜடேஜா விளையாடவில்லை. 

Advertisement

இந்நிலையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி  ஆட்டத்தில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் ஜடேஜா. வணக்கம் சென்னை என  ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார். செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 26 புள்ளிகளைக் கொண்டுள்ள செளராஷ்டிர அணி, அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாடு அணிக்கு எதிராகத் தோற்றாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.