FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர்!

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் முதன் முதலாக இந்திய வீரர் ஒருவர் விளையாடவுள்ளார்.

Updated On : 6 ஆகஸ்ட் 2024, 4:27 pm IST
- படம் | பார்ல் ராயல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரராக தினேஷ் கார்த்திக் மாறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

39 வயதாகும் தினேஷ் கார்த்திக் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அதன்பின், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய சிறப்பான அனுபவங்கள் எனக்கு நிறைய இருக்கிறது. தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவானபோது, என்னால் அதனை மறுக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் இணைந்து விளையாடுவதற்காக காத்திருக்கிறேன் என்றார்.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் 180 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments