FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசியது என்ன?

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

Updated On : 15 ஆகஸ்ட் 2024, 4:28 pm IST
ஸ்டீவ் ஸ்மித் - படம் | ஐசிசி
பகிர்:

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 4 டெஸ்ட் போட்டிகளாக ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 91* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவது குறித்து வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ களமிறங்குவது குறித்து நான் கவலைப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது, புதிய பந்தினை எதிர்கொண்டு விளையாட வேண்டிய சவால் இருக்கும். புதிய பந்தில் ரன்கள் குவிப்பதை நான் விரும்புகிறேன் என்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments