செய்திகள்

இரண்டாவது இன்னிங்ஸில் பதற்றமாக இருந்தேன்: ஷுப்மன் கில்

கடந்த சில போட்டிகளாக பெரிய ஸ்கோர் அடிக்காதது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

DIN

கடந்த சில போட்டிகளாக பெரிய ஸ்கோர் அடிக்காதது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். 

இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக பெரிய ஸ்கோர் அடிக்காதது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போட்டி முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், நான் முதல் பந்தை சந்திக்கும்போது எனது இதயத் துடிப்பு எவ்வாறு இருந்ததோ அதே அளவு கடைசி பந்து வரை இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது எனது இதயத் துடிப்பு ஒரே மாதிரியாக இருந்தது. அந்த அளவுக்கு நான் பதற்றமாக இருந்தேன். இதுபோன்று ஒருபோதும் நான் இருந்ததில்லை. இந்த விஷயம் எனக்கு வித்தியாசமானதாக இருந்தது என்றார். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 104 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT