செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும்  ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. 

பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸான் அவாய்ஷ் மற்றும் அராஃபாத் மின்ஹாஸ் தலா 52 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்டிரேக்கர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT