ரஞ்சி கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த 5 வீரர்கள்!
ரஞ்சிக் கோப்பையிலிருந்து 5 முக்கிய வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.
ரஞ்சிக் கோப்பையிலிருந்து 5 முக்கிய வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.
மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, வருண் ஆரோன், தவால் குல்கர்னி மற்றும் விதர்பா அணியின் கேப்டன் ஃபைஸ் பஸல் தங்களது ரஞ்சி கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 5 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.
ரஞ்சிக் கோப்பை காலிறுதியை எட்டியுள்ளது. காலிறுதிப் போட்டிகள் வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.