கோப்புப்படம் 
செய்திகள்

டி20 உலகக் கோப்பையை வெல்ல இவர்கள் அணியில் வேண்டும்: சுரேஷ் ரெய்னா

டி20  உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு.

DIN

டி20  உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

14 மாத இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். 

இந்த நிலையில், டி20  உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடங்களான அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களின் தன்மை புரிந்து கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கும். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் தேவைப்படுகிறது. விராட் கோலி டி20 போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி வருகிறார். ரோஹித் மற்றும் விராட் கோலியின் வருகை அணிக்கு பேட்டிங்கில் வலுசேர்க்கும். அவர்கள் இருவரும் அணியில் இருப்பது இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றார். 

டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT