ரோம் ஒரே நாளில் உருவாகவில்லை! யுவ்ராஜ் சிங் வெளியிட்ட அபிஷேக் சர்மா விடியோ!
முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் அபிஷேக் சர்மாவுக்கு பயிற்சி அளிக்கும் விடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
குருவான யுவ்ராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தார்.
பின்னர் யுவ்ராஜ் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்படி எல்லாம் அபிஷேக் சர்மாவுக்கு பயிற்சி வழங்கப்பட்டது என்பதை விடியோவாக வெளியிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அவர் வெளியிட்டுள்ள விடியோவில், “ரோம் நகரம் ஒரே நாளில் உருவாகவில்லை. உனது முதல் சர்வதேச சதத்துக்கு வாழ்த்துகள் அபிஷேக்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது இணையத்தில் வைரலாகி வருகிறது. குருவை விஞ்சிய சிஷ்யன் என பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.