அயர்லாந்துக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 158 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே நிர்ணயித்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 158 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே நிர்ணயித்துள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 25) முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 210 ரன்கள் மற்றும் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், அயர்லாந்துக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.