நார்வே செஸ்: முதலிடம் பிடிப்பாரா பிரக்ஞானந்தா?
நார்வே செஸ் போட்டியின் 9ஆவது சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சென் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
நார்வே செஸ் போட்டியின் 9ஆவது சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சென் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
நார்வே செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோர் தோல்வியடைந்தனர்.
கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானில் கார்ல்சென் ஃபிரௌஸ்ஜாவுடனும் டிங் லிரென் ஹிகரு நகமுராவுடனும் பேபியானோ கரோனா பிரக்ஞானந்தாவுடனும் வென்றார்கள்.
Advertisement
Advertisement
9ஆவது சுற்று முடிவில் கார்ல்சென் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஹிகரு நகமுரா 14.5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் பிரக்ஞானந்தா 13 புள்ளிகளுடனும் 3ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.
ஹிகரு நகமுரா தொல்வியுற்றதால் கார்ல்சென் தனது முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார். கடைசி சுற்றில் கார்ல்சென் தோல்வியுற்று, கிளாசிக்கல் கேமில் ஹிகரு நகமுரா வென்றால் முதலிடம் வர வாய்ப்பிருக்கிறது.
பிரக்ஞானந்தா முதலிடம் பிடிக்க கார்ல்சென், ஹிகரு நகமுரா இருவரும் தோற்க இவர் கிளாசிக்கல் கேமில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோரும் தோல்வியடைந்தனர்.
மகளிர் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி முதலிடம் பிடிக்க வாய்ப்பே இல்லை. வென்ஜுன், டிங்ஜி, முஸிஷுக் முதலிடத்துக்கான போட்டியில் இருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.