முகப்பு
செய்திகள்

6-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சென்!

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

Updated On : 8 ஜூன் 2024, 11:33 am IST
மேக்னஸ் கார்ல்சென் - படம்: எக்ஸ் / நார்வே செஸ்
பகிர்:

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், ஆடவா் பிரிவில் மேக்னஸ் கார்ல்சென் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் மோதிய கார்ல்சென் கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது. அதில் வென்ற கார்ல்சென் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் முதலிடம் நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2ஆவது இடமும் இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடமும் பிடித்தார்கள். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் 6ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

2016இல் முதன்முறையாக நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் பட்டம் வென்ற கார்ல்சென் தொடர்ந்து 2019, 2020, 2021, 2022, 2024இல் பட்டம் வென்றுள்ளார். இடையே 2023இல் மட்டும் ஹிகரு நகமுரா வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹிகரு நகமுராவை ஆர்கமெடானில் பிரக்ஞானந்தா வென்றதால் நகமுராவுக்கு முதல் வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடமும் பிடித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments