ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியுடன் விவிஎஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியுடன் விவிஎஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான செயல்பாடுகளை பிசிசிஐ முடுக்கிவிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அவரது பெயரை அதிகாரபூர்வமாக அறிவிப்பது மட்டுமே மீதமுள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.