சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரின் 2-வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்துவார்; பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கம்பீர்!
டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் அரவிந்த் சிதம்பரம். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இந்த இறுதிச்சுற்றில் கடும் போட்டிக்கு இடையே 2-0 என்ற கணக்கில் லெவோன் ஆரோனை வீழ்த்தி அசத்தினார் அரவிந்த் சிதம்பரம்.
இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரத்துக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.